விரல் தொடு போதும்
மோதிரம் வேண்டாம்

கை பிடி போதும்
வளையல் வேண்டாம்

மூச்சு தொடு போதும்
மூக்குத்தி வேண்டாம்

செவி கொடு போதும்
கம்மல் வேண்டாம்

நடந்து வா போதும்
கொலுசு வேண்டாம்

பாசம் ஒன்று போதும்
பட்டாடை வேண்டாம்

புன்னகை போதும்
பொன் நகை வேண்டாம்

கண்ணிமைத்தால் போதும்
உன் துணையாய் நானிருப்பேன்
உன் நிழலாய் வாழ்ந்திருப்பேன்..

No comments: